குறுந்தகவல்
கோழிக் கறியை அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய அசைவ உணவாகும். குளிர்ச்சியான உடம்பு உடையவர்கள் அடிக்கடி சளி பிடிக்கும், அதனால் அவர்கள் கோழிக் கறியுடன் மிளகு சேர்த்து சாப்பிட உடல் சீதளத்தை குறைத்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும். கோழிக் கறியில் அதிக புரத சத்து இருப்பதினால் செரிமானம் சக்தி அதிகரிக்கும். இது உடல் எடையை குறைக்கவும், நரம்பு மண்டலத்தை சரி செய்யவும் என்று பல வகையில் பயன் உள்ளதாக இருக்கிறது.
மூலப்பொருள்
கோழிக் கறி – 1/4 கிலோ
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – சிறியதுண்டு
பூண்டு பல் – 8
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1 (மிதமான அளவு)
தக்காளி – 1 (மிதமான அளவு)
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை
கோழிக் கறியை மஞ்சள் தூள் போட்டு நன்றாக தண்ணீரில் கழுவிய பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் தண்ணீர் ஊற்றி நல்ல மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். ( இந்த மசாலாவை சிறிய உரலில் நசுக்கி அல்லது அம்மியில் வைத்து அரைத்து உபயோகிக்க மிக சுவையாகவும் நல்ல மணமாகவும் இருக்கும்.)
ஒரு குக்கரில் சுத்தம் செய்து வைத்துள்ள கோழிக் கறி, மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக மூடி அடுப்பில் வைக்கவும். 4 அல்லது 5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி வைக்கவும். பிறகு அனைவர்க்கும் ஒரு டம்ளரில் சூப் மட்டும் சிறிய தட்டில் கோழிக் கறியை வைத்து குடுக்கலாம். யாராக இருப்பினும் இந்த சூப்பை விரும்பி சாப்பிடுவர்.
குறிப்பு : இந்த சூப் சாப்பிடுவதால் சளி குறைந்து உடலில் புத்துணர்ச்சியை குடுக்கும். இதை அணைத்து வயதினரும் சாப்பிடுலாம். காரம் அதிகம் விரும்புகிறவர்கள் மிளகு தூள் சூப்பில் கலந்து சாப்பிடுலாம்.


பின்னூட்டமொன்றை இடுக