பகுப்பு: துவரம் பருப்பு சாம்பார்
-

சாம்பார்
துவரம் பருப்பு சாம்பார் நாம் உண்ணும் உணவுகளில் ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. ஏனெனில் சாம்பாரில் துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, புளி என்று பல பொருட்களை வைத்து தயார் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தனித்தன்மையைக் கொண்டது. உதாரணத்துக்கு துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது, வெங்காயம் அதிலும் சிறிய வெங்காயம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மற்றும் புளி கிருமி நாசினியாக செயல்படுகிறது.